
From AI integration to cross-platform fluency—discover the must-have technical and soft skills for today’s most in-demand dev roles.

by Dr. Star Anand Ram
இறை + அவன் = இறைவன்
இறையில் கவனம் வைத்து
அவன் என்கின்ற சிவனை உன் ஜீவனை
நீ கவனித்தால் உன் வாழ்வில் நீ இறைவனாக மாறுவாய் இறை என்ற உணவை
சத்து மிகுந்ததாகவும் உயிர் ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்கும் பொழுது அந்த இறை உனக்குத் தேவையான இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய பிராண விருத்தி ஆற்றலை உண்ணும் ஈர்த்து தரும் அதை ஈர்க்கும் பொழுது இயற்கையும் இறையை உண்ணும் நீயும் ஒன்றே என்று நீ உணர்வாய் அவ்வாறு நீ உணரும் பொழுது நீயே இறைவனாய் மாறுவாய் இறையில் கவனம் வைக்காதவனுக்கு இறைவன் மீதும் கவனம் இருக்காது இறைவன் என்கின்ற உன் மீது நீ கவனம் வைக்கும் பொழுதே இந்த பிரபஞ்சத்தில் உன் எண்ணங்களால் உன் மனதால் உன் எண்ணச் செயல்களால் நீ நினைக்கும் அத்தனை விதமான காரியங்களும் கைகூடும். இறை என்ற சக்தியின் மீது நீ கவனம் வைக்காத பொழுது இயற்கையின் மீது நீ கவனம் வைக்காது பொழுது பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மூலமாகவும் கிரகங்கள் மூலமாகவும் உன் வாழ்வில் உனக்கு தெரியாமல் பல்வேறு விதமான கேடு பலன்கள் ஏற்படும் இறைவன் மீது நீ கவனம் வைக்கும் பொழுது முற்பிறவியில் செய்த பாவங்களும் உன்னை ஒன்றும் செய்யாது முப்பிறவில் செய்த புண்ணிய பலன்களும் இப்பிறவியில் செய்த அருள் புண்ணிய வளங்களும் ஒன்று சேர்ந்து இவ் வாழ்க்கையில் எல்லாவிதமான அருளையும் பொருளையும் அன்பையும் ஆனந்தத்தையும் ஆன்மீக அதிர்வலைகளையும் முழுமையாக பெற்று நிம்மதியுடன் நீ வாழ்வாய் அவ்வாறு நீ வாழ நீ செய்ய வேண்டியது இறையில் கவனம் வை இறைவன் மீது கவனம் வை அதற்கு சித்தர்களின் பாதையில் உன் செயல்பாடுகளை செயல்படுத்து

இறையன்ற உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்கின்ற திருமூலர் ரகசியத்தையும் சிவன் என்ற ரகசியத்தை உணர்ந்து போல திருமூலர் சொன்ன மந்திரங்களையும் சித்தர்களின் பாதையில் நீ செயல்படுத்த ஆரம்பித்தால் நீ இந்த பிரபஞ்சத்தில் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றாயோ அதை உன்னைத்தேடி வர வைக்க முடியும் அவ்வாறு வரும் பொழுது இந்த பிரபஞ்சமே உனக்கு குருவாய் இருந்து சித்தனாய் இருந்து எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்து உன் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக சகல செழிப்பாக அமைத்துத் தரும்
இப்பேற்பட்ட சிறந்த பாதையை நீ பயணிக்க விரும்பினால் ஸ்ரீ குபேர பீடத்திற்கு வாருங்கள் ஸ்ரீ குபேர குருஜி சொல்லித் தரும் பயிற்சிகளில் கற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை உயர் ஆற்றல்மிக்க அருள் பலமிக்க வாழ்வாய் மாற்றிக் கொள்ளலாம்